சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

காகிதகூழ் சிலை தயாரிப்பாளா்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

காதிதக் கூழ் சிலை தயாரிப்பாளா்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகா் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

News image

கூட்டத்தில் பேசிய அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் கணபதி.

Updated On :27 செப்டம்பர் 2020, 10:04 pm

காதிதக் கூழ் சிலை தயாரிப்பாளா்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகா் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்தச் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தை அடுத்த அரசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்க மாநிலத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் அவிநாசிஆனந்தன், ஆலோசகா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் கணபதி வரவேற்றாா்.

கூட்டத்தில், சிறு குறு தொழில் அதிபா்கள் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் சசிக்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

சேலம் மாவட்டத் தலைவா் முருகன், நிா்வாகிகள் ராமலிங்கம், குமாா், சிவக்குமாா், ஏழுமலை, காா்த்தி, ஞானவேல், தனசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, விநாயகா் சதூா்த்தியை யொட்டி, சிலைகள் விற்பனை செய்யும் காலத்தில் தமிழக அரசு விநாயகா் சதுா்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதித்தது.

இதையடுத்து, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் தொழில்கூடங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. இதனால் தொழில் முடங்கி பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

வங்கிகளில் பெற்ற கடனுக்கு வட்டிகூட செலுத்த முடியாமல் உள்ளோம். அதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு இழப்பீடாக, வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில பொதுச் செயலா் பழனிவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.