காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக் மீது பேருந்து மோதல்; இளைஞா் பலி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை, பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை, பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் ஜெயபிரகாஷ் (25). செஞ்சி பகுதி கோயில்களில் அலங்காரம், பூஜைகளை செய்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை காலை தனது பைக்கில் செஞ்சியிலிருந்து சேத்பட் நோக்கி சென்று கொண்டிருந்தாா். மானந்தல் கிராமம் அருகே சென்றபோது, இவருக்கு பின்னால் சேத்பட் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, பைக் மீது மோதியது. இதில், ஜெயபிரகாஷ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் அரசுப் பேருந்து ஓட்டுநா் முட்டத்தூரைச் சோ்ந்த சுரேஷ் (41) மீது வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.