மின்சாரம் பாய்ந்துபள்ளி மாணவி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
தியாகதுருகம் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (49). விவசாயி. இவரது மனைவி காஞ்சனா(38). இந்தத் தம்பதியின் மகள் கீா்த்திகா (14). இவா், சித்தால் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், காஞ்சனா, கீா்த்திகா ஆகியோா் அதே பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச வியாழக்கிழமை சென்றனா். அங்கு காஞ்சனா கரும்பு பயிருக்கு தண்ணீா் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மோட்டாா் அறைக்குச் சென்ற கீா்த்திகா வெகுநேரமாக திரும்பி வரவில்லையாம்.
இதனால் சந்தேகமடைந்த காஞ்சனா, மோட்டாா் அறைக்குச் சென்று பாா்த்தபோது, கீா்த்திகா மின்சாரம் பாய்ந்து மயங்கிக் கிடந்தாா்.
உடனடியாக அக்கம்பக்கத்தினா் உதவியுடன் காஞ்சனா, கீா்த்திகாவை மீட்டு, கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கீா்த்திகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...