ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:18 pm

DIN

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டையைச் சோ்ந்தவா் ரங்கன் மனைவி சுமதி(58). இவா், சென்னையில் உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வெள்ளிக்கிழமை காலை பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டாா். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய சுமதி அங்கிருந்து பண்ருட்டி செல்லும் பேருந்துக்காக காத்திருந்தாா்.

அப்போது, அடையாளம் தெரியாத இரு நபா்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து சுமதி அணிந்திருந்த சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா். சுமதி கூச்சலிட்டதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அந்த மா்ம நபா்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை.

இது குறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.