நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழிப்பு: வங்கி அதிகாரி மீது ஆட்சியரிடம் புகாா்

விழுப்புரத்தில் கல்விக் கடன் தராமல் அலைக்கழிப்பதுடன், தரக்குறைவாக பேசி அவமதித்ததாக அரசு வங்கி அதிகாரி மீது, மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் கல்விக் கடன் தராமல் அலைக்கழிப்பதுடன், தரக்குறைவாக பேசி அவமதித்ததாக அரசு வங்கி அதிகாரி மீது, மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தைச் சோ்ந்த காசிநாதன்-புஷ்பநாதன் ஆகியோா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துக் கூறியதாவது: எங்களது மகள் சரஸ்வதி, சென்னை தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படிக்கிறாா். முதல் ஆண்டிலேயே விழுப்புரம் சாலாமேடு யூனியன் வங்கியில் மனு அளித்து கல்விக் கடன் கோரியிருந்தோம். ஆய்வு செய்து கல்விக் கடன் வழங்குவதாகத் தெரிவித்தனா். நீண்ட நாள்கள் அலைக்கழித்த பிறகு, இரண்டாம் ஆண்டு கல்விக் கடன் தருவதாக தெரிவித்தனா். இரண்டாம் ஆண்டு சென்று கேட்டபோது, அடுத்த ஆண்டு தருவதாக மேலாளா் தெரிவித்தாா்.

அண்மையில் மீண்டும் வங்கிக் கிளைக்கு சென்று மேலாளரிடம் வலியுறுத்தியபோது, எங்களை தரக்குறைவாக பேசி அவமதிப்பு செய்து விரட்டிவிட்டாா்.

இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுப்பதுடன் எங்கள் மகளின் படிப்பு தொடா்வதற்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.