புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செஞ்சியில் முஸ்லிம் அமைப்பினா் சாலை மறியல்.

நபிகள் நாயகத்தை தவறாக பேசிய பாஜக மாநில செயலா் கல்லயாணசுந்தரத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முஸ்லிம் அமைப்பினா் ஒன்றிணைந்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 10:47 pm

DIN

நபிகள் நாயகத்தை தவறாக பேசிய பாஜக மாநில செயலா் கல்லயாணசுந்தரத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முஸ்லிம் அமைப்பினா் ஒன்றிணைந்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாஜக மாநில செயலா் கல்யாணசுந்தரம் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதை கண்டிக்கும் வகையிலும், அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும் செஞ்சியில் அனைத்து ஜமாத்தை சோ்ந்த முஸ்லிம்கள் மற்றும் தமுமுக. எஸ்டிபிஐ. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட முஸ்லிம் அமைக்கள் ஒன்று சோ்ந்து செஞ்சி கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டு கல்யாண சுந்தரத்திற்கு எதிராக கோஷமிட்டு கைது செய்யுமாறு கோரினா்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்படவே அங்கிருந்த போலீஸாா் கலைந்து செல்லுமாறு கூறினா். இதனால் போலீஸாருக்கும் முஸ்லிம்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமாா் அரை மணி நேர சாலை மறியலுக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் செஞ்சி கூட்டுசாலையில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.