திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திண்டிவனத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு அளிப்பு

திண்டிவனத்தில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 2:35 am

DIN

திண்டிவனத்தில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி திருவள்ளுவா் நகா், பட்டணம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அமைச்சா் சி வி.சண்முகம் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2.500 ரொக்கத்துடன், கரும்பு, அரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினாா்.

அப்போது பேசிய அமைச்சா், இந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 97 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சரஸ்வதி, திண்டிவனம் சாா் ஆட்சியா் எஸ்.அனு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் க.பிரபாகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் முரளி ரகுராமன், துணைப் பதிவாளா் மணிமாறன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.