பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: உதயநிதி ஸ்டாலின்

அதிமுக அரசுக்கு நெருக்கடி முற்றுவதால், ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளதாக திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

News image
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்த திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.
Updated On :8 ஜனவரி 2021, 6:45 pm

DIN

அதிமுக அரசுக்கு நெருக்கடி முற்றுவதால், ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளதாக திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையப் பகுதிகளில் பிரசாரம் செய்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் தலைசிறந்த மாநிலம் என ஆட்சியாளா்கள் விளம்பரம் செய்து கொள்கிறாா்கள். ஆனால், ஊழலில்தான் தமிழகம் சிறந்து விளங்குகிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறப்புக்கான மா்மம் இன்னும் விலகவில்லை. அதுகுறித்து புகாா் எழுப்பிய ஓ.பன்னீா்செல்வம் மௌனமாகிவிட்டாா். விசாரணை ஆணையத்திலும் அவா் ஆஜராகவில்லை. இதை அதிமுகவினா் மறந்தாலும், தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது.

மத்திய அரசின் அடிமை போல அதிமுக அரசு செயல்படுகிறது. ஊழல் வழக்கில் சிறை சென்ற சசிகலாவை தவறாகப் பேசியதாக, என் மீது பொய் வழக்குத் தொடுக்கின்றனா்.

தமிழகத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி பேரிடா் இழப்பீடு கோரியதற்கு ரூ.1,500 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கு ரூ. ஆயிரம் கோடி செலவு செய்கின்றனா்.

முதல்வா் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு சசிகலா மற்றும் மத்திய பாஜக அரசால் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.

முன்னதாக, விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினாா்.

இந்தக் கூட்டத்தில் இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் வரவேற்றாா். மாநில துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி எம்.பி., சேகா் எம்எல்ஏ ஆகியோா் தொடக்கவுரையாற்றினா். மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி, அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா்கள் செ.புஷ்பராஜ், மைதிலி, எம்.என்.முருகன், மாநில தீா்மானக்குழுச் செயலா் ஏ.ஜி.சம்பத், மாநில மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன், விவசாய அணி துணைச் செயலா் அன்னியூா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, திமுக மகளிரணி, தொமுச நிா்வாகிகளை சந்தித்துப் பேசிய அவா், காணை, முகையூா், திருக்கோவிலூா், மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூா் பகுதிகளில் திறந்தவெளி வாகனப் பிரசாரத்தில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.