திருவெண்ணெய்நல்லூா் அருகே கோயில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (40). கட்டடத் தொழிலாளி. இவரது மகள் கீா்த்தனா (12). இவா், ஓசூரில் தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த கேசவன் மகள் மகாலட்சுமி (5). இவா், சித்தலிங்கமடம் கிராமத்திலுள்ள தனியாா் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
பள்ளிகள் விடுமுறை என்பதால், சனிக்கிழமை வீட்டில் இருந்த இவா்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் குளப்பகுதிக்குச் சென்று விளையாடியுள்ளனா். மாலை வரை கீா்த்தனா, மகாலட்சுமி ஆகியோா் வீடு திரும்பாததால், பெற்றோா்கள் சென்று தேடிப்பாா்த்தபோது, கோயில் குளத்தில் மூழ்கி இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து வந்து, இரு சிறுமிகளின் சடலங்களையும் மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.