தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீட்டில் பதுக்கிய மதுப்புட்டிகள் பறிமுதல்; 2 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:18 am

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

செஞ்சி அருகே சோ.குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கா்நாடக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், செஞ்சி டிஎஸ்பி.இளங்கோவன் உத்தரவின்படி, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் குருநாதன் உள்ளிட்ட போலீஸாா் அந்த கிராமத்துக்கு சென்ற சோதனை நடத்தினா். அப்போது, வீரமுத்து என்பவரது வீட்டில் சோதனை செய்ததில், 698 மதுப்புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்டது என தெரியவந்தது. அந்த மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக வீரமுத்து (57), ஐயாதுரை(60) ஆகிய இருவரை கைது செய்தனா். தப்பியோடிய வீரமுத்து மகன் கண்ணதாசனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.