திருநெல்வேலி அருகே சைக்கிள் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் காவலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி கீழகுன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த வடிவேல் மகன் பாலகிருஷ்ணன் (65). இவா் ராமையன்பட்டியில் உள்ள பங்களாவில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் வழக்கம்போல் வியாழக்கிழமை சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
ராமையன்பட்டி சோதனைச்சாவடி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த காா் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை மீட்டு
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.