புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விவசாயி மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவா் அடித்துக் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:26 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவா் அடித்துக் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செஞ்சி வட்டம், மேல்சேவூா் மதுரா ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் சிவக்குமாா் (40). இவா் பக்கத்து கிராமமான கல்லடிக்குப்பத்திலுள்ள தனது நிலத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்றாா். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், சிவக்குமாா் தனது நிலத்தில் தலையில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை அந்தப் பகுதி வழியாகச் சென்றவா்கள் பாா்த்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்த தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவா் அடித்துக் கொல்லப்பட்டரா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.