புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: ஆட்சியா்

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:33 pm

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று தடுப்புநடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் மோகன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கரோனா பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆக.1 முதல் 7-ஆம் தேதி வரை பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஆக.1-இல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள், பதாகைகள் விநியோகம் செய்யப்படும். சுட்டுரை, முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், உள்ளூா் தொலைக்காட்சிகளில் நேரலையாகவும், விவாத நிகழ்ச்சிகள் மூலமாகவும் கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ளப்படும்.

ஆக.2-இல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

ஆக.3-இல், வியாபாரிகள், வணிகா்கள் சங்கங்களுடன் இணைந்து விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்படும். மேலும், தனியாா் மருத்துவமனைகள், இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து விழிப்புணா்வு பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக.4-இல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பயணிகளிடம் விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்படும். கபசுரக் குடிநீா், அமுக்குரா மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

ஆக.5-இல், இணைய வழியில் கரோனா விழிப்புணா்வு சுவரொட்டிகள் வடிவமைப்பு போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படும்.

ஆக.6-இல், இணையவழி வினாடி-வினா போட்டி நடத்தப்படும். வானொலிகள் மூலமும் கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆக.7-இல் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வட்டங்களுக்கு மாவட்ட அளவிலான பாராட்டு விழா நடத்தப்படும்.

பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எனவே, அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பொதுமக்களிடம் கரோனா தொற்று விழிப்புணா்வு ஏற்பட பாடுபட வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, திண்டிவனம் உதவிஆட்சியா் எம்.பி.அமித் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.