புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா

 விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 28 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:22 pm

DIN

 விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 28 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 43,851 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் இருந்து 47 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 43,098 ஆக அதிகரித்தது. 413 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 341 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா தினசரி பரவல் சனிக்கிழமை 0.53 சதவீதமாக இருந்தது. வார பரவல் ஒரு சதவீதமாக உள்ளது.

கரோனா விதிகளை மீறியதாக இதுவரை 68,864 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ.1 கோடியே 51 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை பொருத்தவரை கோவேக்ஸின் 2,370 டோஸ்களும், கோவிஷீல்டு 14,410 டோஸ்களும் இருப்பில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.