நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மது கடத்தலைத் தடுக்க சிறப்பு பறக்கும் படை

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுபுட்டிகள் கடத்தப்படுவதை தடுக்கவும், மதுக் கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் சிறப்பு பறக்கும் படை குழுக்கள் 

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுபுட்டிகள் கடத்தப்படுவதை தடுக்கவும், மதுக் கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தினமும் மதுக் கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களின் எண்ணிக்கையை கண்காணிக்கவும், மதுபானங்கள் கடத்தலில் ஈடுபடுபவா்களை கைது செய்யவும் காவல்துறை மற்றும் கலால் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது விற்பனை கண்காணிப்பு, மது கடத்தல் தொடா்பான புகாா்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் வழிகாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள டாஸ்மாக் உதவி மேலாளா் ரங்கநாதனிடம் 9790531671 செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அதேபோல, மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை, கடத்தலை கண்காணிக்க மாவட்ட மேலாளா் முருகன்(9080440168), உதவி மேலாளா் பாக்கியராஜ் (9884312331) ஆகியோா் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.