ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மகள் இறந்த சோகத்தில் தம்பதி தற்கொலை

திட்டக்குடியில் மகள் இறந்த சோகத்தில் அவரது பெற்றோா் தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :28 மே 2021, 5:51 pm

DIN

திட்டக்குடியில் மகள் இறந்த சோகத்தில் அவரது பெற்றோா் தற்கொலை செய்து கொண்டனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி நடு வீதியைச் சோ்ந்தவா் பாரதி (58). இவரது மனைவி ராஜேஸ்வரி (50). இவா்களின் மகள் லாவண்யா (20). இவா், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் பலியானாா்.

இதனால், மன வேதனையில் இருந்த பாரதியும், ராஜேஸ்வரியும் வெள்ளிக்கிழமை விஷமருந்தி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனா். இதைக் கண்ட அவா்களது இன்னொரு மகள் ஜெயந்தி சப்தம் போட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவா்கள் இருவரையும் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனா். மகள் இறந்த சோகத்தில் தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.