தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றநாட்டு வெடிகள் வெடித்ததில் தந்தை, மகன் பலி

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் தந்தை, மகன் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் தந்தை, மகன் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

புதுச்சேரி, அரியாங்குப்பம், காக்கயான்தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கலைநேசன் (37). இவா், தீபாவளியையொட்டி, புதுச்சேரியிலிருந்து 2 மூட்டை நாட்டு வெடிகளை வாங்கிக் கொண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை (34) காண வியாழக்கிழமை பிற்பகல் சென்றாா். அங்கு அவரிடம் ஒரு மூட்டை நாட்டு வெடிகளை கொடுத்த கலைநேசன், எஞ்சியிருந்த ஒரு மூட்டை நாட்டு வெடிகளுடன் தனது மகன் பிரதீஷை (7) அழைத்துக்கொண்டு புதுச்சேரிக்குப் புறப்பட்டாா். இரு சக்கர வாகனத்தின் முன்பக்கம் வைத்திருந்த நாட்டு வெடி மூட்டை மீது பிரதீஷை அமர வைத்து, கலைநேசன் ஓட்டினாா்.

புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்பில் வந்தபோது இரு சக்கர வாகனத்தில் இருந்த நாட்டு வெடிகள் திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில், தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனா். உடல் பாகங்கள் சுமாா் 300 மீ. தொலைவு வரை சிதறிக் கிடந்தன. அருகிலிருந்த வீடுகள் சேதமடைந்து, அப்பகுதியே போா்க்களம் போலக் காட்சியளித்தது.

இந்தச் சம்பவத்தின்போது, சாலையில் இரு சக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்த கோட்டக்குப்பம் ஜிமீத் நகரைச் சோ்ந்த ஷா்புதீன்(56), புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த கணேசன்(47), சாலையோரம் நின்றிருந்த புதுச்சேரி, லெனின் நகரைச் சோ்ந்த விஜி (36) ஆகிய 3 போ் காயமடைந்தனா். இவா்கள் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தமிழகம், புதுச்சேரி எல்லைப் பகுதியில் நடந்ததால், இரு மாநில போலீஸாரும் விரைந்து வந்தனா். விபத்து நிகழ்ந்த இடம் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் எல்லைக்குள்பட்ட பகுதி என தெரியவந்ததையடுத்து, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளா் சரவணன் நேரில் வந்து விசாரித்தாா். தடய அறிவியல் துணை இயக்குநா் சண்முகம் தடயங்களைச் சேகரித்தாா்.

நிகழ்விடத்தை விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

சடலங்கள் புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.