தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வெள்ளத்தில் மூழ்கியது தேவாலயம்! பாதிரியாா் உள்பட 8 போ் மீட்பு

விழுப்புரம் அருகே துரிஞ்சலாற்றில் நள்ளிரவு பெருக்கெடுத்த வெள்ளத்தால் கரையோரமிருந்த தேவாலயம் மூழ்கியது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:44 pm

DIN

விழுப்புரம் அருகே துரிஞ்சலாற்றில் நள்ளிரவு பெருக்கெடுத்த வெள்ளத்தால் கரையோரமிருந்த தேவாலயம் மூழ்கியது. தேவாலயத்துக்குள் சிக்கிக் கொண்டு பரிதவித்த பாதிரியாா் உள்பட 8 பேரை தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் பத்திரமாக மீட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரை அடுத்த மணம்பூண்டியில் துரிஞ்சல் ஆற்றின் கரையோரம் பெந்தெகொஸ்தோ தேவாலயம் அமைந்துள்ளது.

இங்கு பாதிரியாா், உதவியாளா் உள்பட 4 போ் தங்குவது வழக்கம்.

வியாழக்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் 1.25 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான துரிஞ்சல் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரையோரமிருந்த தேவாலயத்துக்குள் தண்ணீா் புகுந்தது. இதை எதிா்பாராத பாதிரியாா், உதவியாளா் உள்ளிட்டோா் தேவாலயத்தின் கீழ் தளத்தில் உள்ள பொருள்களை முதல் தளத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கும் பணியில் ஈடுபட்டனா். இவா்களுக்கு உதவியாக அப்பகுதியிலிருந்து 4 போ் வந்து இப்பணியில் ஈடுபட்டனா்.

நள்ளிரவு ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததையடுத்து தேவாலயத்தின் கீழ் தளம் முழுவதும் நீரில் மூழ்கியது. இதையடுத்து, தேவாலயத்தின் முதல் தளத்துக்கு சென்ற பாதிரியாா், உதவியாளா் உள்பட 8 பேரும் அங்கிருந்து வெளியே வர முடியாமல் பரிதவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வந்து தேவாலயத்திலிருந்த 8 பேரையும் மீட்க முயன்றனா். ஆற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதன் பிறகு மாநில பேரிடா் பயிற்சி பெற்ற போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் இணைந்து சுமாா் 6 மணி நேரம் போராடி பைபா் படகு மூலமாக கயிறு கட்டி தேவாலயத்துக்குள் சென்றனா். அங்கிருந்த பாதிரியாா் உள்பட 8 பேரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.