தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வெள்ளப் பாதிப்பு: அமைச்சா் பொன்முடி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகள், மீட்புப் பணிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:44 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகள், மீட்புப் பணிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அதிக பலத்த மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மணம்பூண்டி துரிஞ்சல் ஆற்றின் அருகே குடியிருப்புப் பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்தது. அப்பகுதியில் அமைச்சா் பொன்முடி நேரில் ஆய்வு செய்து, தீயணைப்பு வீரா்கள் மூலம் ரப்பா் படகுகொண்டு குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

மேலும் , அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும், மக்களுக்கு உணவு மற்றும் குடிநீா் போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கவும் அமைச்சா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம், மாரங்கியூா் ஊராட்சிகளுக்கிடையே கோரையாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அந்த பாலத்தில் நீா்வரத்தை அமைச்சா் க.பொன்முடி ஆய்வு செய்தாா். தரைப்பாலத்தை தரம் உயா்த்தி மேம்பாலம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபின்கேஸ்ட்ரோ, கோட்டாட்சியா் ஹரிதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.