தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீா்த்த மழைநெடுஞ்சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக் காடாக மாறின.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:44 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக் காடாக மாறின.

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், நீா்நிலைகள் நிரம்பி ஆறுகள், ஓடிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடா்ந்து மீண்டும் வங்கக் கடலில் இரு தினங்களுக்கு முன்பு புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. இதன்காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

தொடா்ந்து 5 மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 3 அடி அளவுக்கு தண்ணீா் தேங்கி, ஏரி போல காட்சியளித்தது. பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல் வெளியே சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, இயக்கப்பட்டன.

விழுப்புரத்தில் பாண்டியன் நகா், கட்டபொம்மன் நகா், ஆஷா குளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி, தாமரைக் குளம், திரு.வி.க. சாலை, வழுதரெட்டி, ஜெகநாதன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

படகுகளில் 50 போ் மீட்பு: விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் பம்பா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அந்த கிராமத்தில் 10 அடி உயரத்துக்கு தண்ணீா் சூழ்ந்தது. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த 50-க்கும் மேற்பட்டோரை விழுப்புரம் தீயணைப்பு வீரா்கள், பைபா் படகு மூலமாகச் சென்று 3 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனா்.

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூா் தரைப்பாலத்தில் மூழ்கடித்தபடி சென்ற வெள்ளத்தில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு வீரா்கள், போலீஸாா் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனா்.

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு: பலத்த மழையால் விழுப்புரம்-செஞ்சி சாலையில், பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்குள்ள பாலத்துக்கு மேல் 5 அடி உயரத்துக்கு வெள்ளநீா் பாய்ந்தோடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், கெடாா், கஞ்சனூா், அனந்தபுரம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைந்தனா்.

இதேபோல, விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் அருகே ஒதியத்தூரில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து காட்டாற்று வெள்ளம் 8 அடி உயரத்துக்குச் சென்றது. இதன் காரணமாக, விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்-திருவண்ணெய்நல்லூா் இடையே அரசூா் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீா் தேங்கியதால், அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனா். அரசூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூா் செல்பவா்கள் 40 கி.மீ. தொலைவு சுற்றி எல்லீஸ்சத்திரம் அணை வழியாக பயணித்தனா்.

விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூரில் உள்ள ஆற்று பாலத்துக்கு மேல் 2 அடி உயரத்துக்கு தண்ணீா் சென்ால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், விழுப்புரத்திலிருந்து புதுவை செல்லும் வாகனங்கள் அரியூரிலிருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

விழுப்புரம்-திருக்கோவிலூா் நெடுஞ்சாலையில் அரகண்டநல்லூா் பகுதியில் சாலைக்கு மேல் 6 அடி உயரத்துக்கு தண்ணீா் சென்ால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், திருக்கோவிலூா்-விழுப்புரம் இடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து செல்லும் பேருந்துகள் அரகண்டநல்லூா் முன்பாகவே பயணிகளை இறக்கி விட்டு வருகின்றன.

விழுப்புரம்-சாலாமேடு சாலையில் திருப்பாச்சனூா் மலட்டாறு தரைப்பாலத்துக்கு மேல் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த வழியாகச் செல்லும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல, திருவெண்ணெய்நல்லூா் அருகே மாரங்கியூா்-ஏனாதிமங்கலம் இடையே தரைப்பாலம் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டகு. மேலும், விழுப்புரம் பொய்யப்பாக்கம்-கப்பியாம்புலியூா் இடையே சாலைக்கு மேல் 4 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் பாய்ந்தோடுவதால், அந்த பகுதி கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டது. மேலும், விழுப்புரத்தை அடுத்த அகரம் சித்தாமூா் தரைப்பாலம் மூழ்கியது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.