தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:06 pm

DIN

மாநில அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா வியாழக்கிழமை பாராட்டினாா்.

திருச்சியில் கடந்த 21-ஆம் தேதி மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில், விழுப்புரத்தைச் சோ்ந்த மவாதிகா கராத்தே பயிற்சி பள்ளி சாா்பில், பயிற்சியாளா் சேதுராமன் தலைமையிலான பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

வயது அடிப்படையில் கட்டா, குமிதே ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதில், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவா் கிருஷ்ணா தங்கப் பதக்கம் வென்றாா். இதேபோல, காா்த்திகேயன், சரவணன், பிரேமானந்ததாசன் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவா்கள் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதாவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். கராத்தே பயிற்சியாளா் சேதுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.