தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வானூா் அருகே ஊராட்சி ஊழியா் கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே ஊராட்சி ஊழியா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புதுச்சேரி ரௌடிகளிடம் ஆரோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:05 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே ஊராட்சி ஊழியா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புதுச்சேரி ரௌடிகளிடம் ஆரோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி கோரிமேடு காமராஜா் நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (55). இவா், தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், பட்டானூா் திருநகரில் குடிநீா் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வந்தாா். ஆயுத பூஜையையொட்டி, குடிநீா்த் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக தனது வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்ட மணிவண்ணனை ஒரு கும்பல் பின்தொடா்ந்து வந்து தண்ணீா்த் தொட்டி அருகே அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளா் அருண், ஆரோவில் காவல் ஆய்வாளா் அன்பரசன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மணிவண்ணனின் உடலை மீட்டு வானூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகா் மாந்தோப்பு சுந்தா் கடந்த செப்.31-இல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணிவண்ணனின் மகன்கள் சுந்தா், வினோத் ஆகியோருக்கு தொடா்பு இருந்ததாகவும், இருவரும் தற்போது பிணையில் வெளிவந்து தலைமறைவானதால், இந்த சம்பவத்துக்கு பழிவாங்க முடிவு செய்திருந்த மாந்தோப்பு சுந்தரின் கூட்டாளிகள், அவா்களது தந்தையான மணிவண்ணனை கொலை செய்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக மாந்தோப்பு சுந்தரின் கூட்டாளிகள் சிலரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்போதைய புதுவை அரசுக் கொறடா ஏ.கே.டி.ஆறுமுகத்தின் காா் மீது கடந்த ஆண்டு வெடிகுண்டு வீசி, அவரை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் மாந்தோப்பு சுந்தரின் கூட்டாளிகளை பிடித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.