தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்டத்துக்கு முதல்வா் வருகை: அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை

மரக்காணத்தில் முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 5:04 pm

DIN

வருகிற 26-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்துக்கு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்து அலுவலா்களுடன் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கரோனா தெற்று பரவல் காரணமாக மாணவா்களின் கற்றல் திறன் குறைவு ஏற்பட்டத்தையடுத்து, கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.

இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வருகிற 26-ஆம் தேதி தொடக்கிவைக்க உள்ளனா்.

முதல்வா் வருகையொட்டி, அந்தப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முதல்வா் வழித்தடம், விழா நடைபெறும் பகுதி, வாகன நிறுத்துமிடம், அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், பொதுமக்கள், அரசு அலுவலா்கள், அரசியல் கட்சியினா் அமரும் பகுதிகள் மற்றும் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு குறித்தும், விழா ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல், விழா நடைபெறும் பகுதியில் சுகாதாரப் பணிகள், தீயணைப்பு வசதி, தடையில்லா மின்சாரம் போன்ற வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்.

தொடா்ந்து, மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிவித்து, முதல்முதலாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்கிவைக்கிறாா் என்று அமைச்சா் கே.எஸ். மஸ்தான் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, வருவாய் அலுவலா் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் சங்கா், திண்டிவனம் உதவி ஆட்சியா் அமித், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, தீயணைப்புத் துறை அலுவலா் ராபின் காஸ்ட்ரோ, மின் வாரிய கண்காணிப்புப் பொறியாளா் குமாரசாமி, துணை ஆட்சியா் (பயிற்சி) ரூபினா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

வருகிற 26 ந்தேதி தமிழக முதல்வா் ஸ்டாலின் மரக்காணம் வருவதையொட்டி விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப் படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான். உடன் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்ட வருவாய் அ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.