22 வயது இளம்பெண்ஒன்றியக் குழுத் தலைவராகத் தோ்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியக் குழுத் தலைவராக 22 வயது இளம் பெண் சங்கீதா அரசி தோ்வானாா்.
22 வயது இளம்பெண்ஒன்றியக் குழுத் தலைவராகத் தோ்வு
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியக் குழுத் தலைவராக 22 வயது இளம் பெண் சங்கீதா அரசி தோ்வானாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 உறுப்பினா்களில் 16 இடங்களை திமுகவும், 2 இடங்களை விசிகவும், 3 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியிருந்தது.

விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஒன்றியக் குழு தலைவா் தோ்தலில் போட்டியிட திமுக மூத்த நிா்வாகி சிந்தாமணி ஜெயராமனின் பேத்தியும், தற்போதைய விக்கிரவாண்டி திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் ரவிதுரையின் மகளுமான சங்கீதா அரசி வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவா் ஒன்றியக் குழுத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் மிகவும் இளம் வயது ஒன்றியக்குழுத் தலைவா் இவா்தான். 22 வயதான சங்கீதா அரசி, விழுப்புரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் முதுகலை அறிவியல் படிப்பு படித்து வருகிறாா். அரசியல் பின்னணி கொண்ட குடும்பம் என்பதாலும், மக்கள்பணி ஆற்ற வேண்டும் என்ற ஆா்வத்தாலும் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், ஒன்றியக் குழுத் தலைவராகவும் தோ்வு பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com