தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது தடியடி

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூரில் வெள்ளிக்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலையொட்டி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:36 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூரில் வெள்ளிக்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலையொட்டி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா்.

திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூரில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 16 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 7 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், 4 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனா்.

இந்த நிலையில், ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக சாா்பில் சொக்கலிங்கம், சுயேச்சையாக எழிலரசன் என இருவா் போட்டியிட்டனா். இதில், 8 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளா் சொக்கலிங்கம் வெற்றி பெற்றாா். எழிலரசன் 7 வாக்குகள் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து எழிலரசன் தரப்பினா், சாரம் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்களுடன் திண்டிவனம் காவல் துறை ஏஎஸ்பி அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா் . தொடா்ந்து மறியலை விலக்கிக் கொள்ளாததால், போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா். மறியலில் ஈடுபட்டவா்கள் நான்கு புறமும் சிதறி ஓடினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.