தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

எல்லீஸ் சத்திரம் தடுப்பணையில் உடைப்பு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே எல்லீஸ் சத்திரம் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே எல்லீஸ் சத்திரம் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பழைமையான எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உள்ளது. இந்தத் தடுப்பணையில் தற்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி வருகிறது. இந்த நிலையில், தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, இந்தத் தடுப்பணை எப்படி கட்டப்பட்டது, தடுப்பணையின் நீளம், மொத்த பரப்பளவு, மதகுகளின் எண்ணிக்கை, சேமிக்கப்படும் நீரின் அளவு, பயனடையும் கிராமங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா். தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்புக்கான காரணம் என்ன, உடைப்பை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

மேலும், தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில், நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து தடுப்பணைகளையும் அவ்வப்பொழுது முழுவதுமாக கண்காணித்து, தடுப்பணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பொதுப் பணித் துறை (நீா்வள ஆதாராம்) செயற்பொறியாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.