தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

ஊரக உள்ளாட்சித் தோ்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 4-ஆவது நாளில் 2,812 போ் வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4-ஆம் நாளான சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 1,497 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,315 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:42 pm

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4-ஆம் நாளான சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 1,497 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,315 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. 4-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 5 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 46 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 226 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,220 பேரும் என மொத்தம் 1,497 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கல் தொடங்கியதிலிருந்து கடந்த 4 நாள்களில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 10 போ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 97 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 841 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 4,360 போ் என மொத்தம் 5,308 போ் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4-ஆம் நாளான சனிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதிவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 32 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 194 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,088 பேரும் என மொத்தம் 1,315 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். மாவட்டம் முழுவதும் மேற்கூறிய பதவிகளுக்கு கடந்த 4 நாள்களில் மொத்தம் 3,203 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.