தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஐபிஎல் தொடரிலிருந்து பென் டக்கெட் விலகல்! இரண்டு ஆண்டுகள் விளையாடத் தடை!

தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.

News image

பென் டக்கெட்

படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)

Updated On :24 மார்ச் 2026, 2:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் விலகியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளார்.

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது, பென் டக்கெட் ரூ. 2 கோடிக்கு தில்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடாததால் சிவப்பு பந்து போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக பென் டக்கெட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் ஒருவர் காயம் காரணமாக விலகுவதை தவிர்த்து, பிற தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதி.

அதன் படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பென் டக்கெட் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடிய பென் டக்கெட் வெறும் 202 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த தொடரில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.