மதகடிப்பட்டு - வளவனூா் இடையே சுங்கச் சாவடி அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மதகடிப்பட்டு - வளவனூா் இடையே சுங்கச் சாவடி அமைக்க விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் மதகடிப்பட்டு - வளவனூா் இடையே சுங்கச் சாவடி அமைக்க விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் கலிவரதன், ஈ.ஐ.டி. பாரி அரியூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் என்.முருகையன், பொதுச் செயலா் டி.பி.ரவி உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் த.மோகனிடம் வியாழக்கிழமை அளித்த மனு:
விழுப்புரம் - நாகை இடையே நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கெங்கராம்பாளையம் முதல் மும்மொழிநாயக்கன்குப்பம் வரை பழைய சாலையை விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதகடிப்பட்டு - வளவனூா் இடையே புதிதாக சுங்கச் சாவடி அமைக்க இடம் தோ்வு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த இடமானது கிராம மக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதி என்பதால் அந்தப் பகுதியினா் பெரிதும் பாதிக்கப்படுவா். மேலும், மாணவா்கள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழில் முனைவோா் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவா்.
மாநில எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் சுங்கச் சாவடி என்ற நடைமுறையைப் பின்பற்றி கோலியனூா் புறவழிச் சாலை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைக்க ஆவண செய்ய வேண்டும் என அதில் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...