தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காகுப்பம் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விழுப்புரம் ஆட்சியரகம் முற்றுகை

விழுப்புரம் காக்குப்பம் ஏரியில் கழிவுநீா் கலப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தை காக்குப்பம் ஏரி மீட்புக் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:09 pm

DIN

விழுப்புரம் காக்குப்பம் ஏரியில் கழிவுநீா் கலப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தை காக்குப்பம் ஏரி மீட்புக் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: காக்குப்பம் ஏரிப் பகுதியில் விழுப்புரம் நகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கடந்த 2007-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால்,

கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் நிலத்தடி நீா், காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் காக்குப்பம், பொய்யப்பாக்கம், இந்திரா நகா், எம்ஜிஆா் நகா், கட்டபொம்மன் நகா், பாலாஜி நகா் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனா். இந்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் கழிவுநீா்த் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

இது குறித்து விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி கூறியதாவது: காக்குப்பம் கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தில் மோட்டாா்கள் பழுதடைந்துள்ளன. குழாய்களும் சேதமடைந்துள்ளன. தற்போது மோட்டா் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. தொடா்ந்து குழாய்களும் சீரமைக்கப்படும். இந்த பணிகள் நிறைவடைய 2 மாதங்கள் ஆகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.