ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல்

நீதிமன்றத் தடை மற்றும் மேல்முறையீட்டை விலக்கிக் கொண்டு, அகவிலைப் படி உயர்வை வழங்கக்கோரி, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

News image
Updated On :29 டிசம்பர் 2022, 12:07 pm IST

விழுப்புரம்: நீதிமன்றத் தடை மற்றும் மேல்முறையீட்டை விலக்கிக் கொண்டு, அகவிலைப் படி உயர்வை வழங்கக்கோரி, விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் - திருச்சி சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் கோட்டத்தின் கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மண்டலங்களைச் சேர்ந்தோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழு ஆண்டுகளாக வழங்காத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது.

இவர்களைக் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.