விழுப்புரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்படும் என மாநில உயா் கல்வித் துறை க.பொன்முடி வாக்குறுதி அளித்தாா்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் பொன்முடி இந்த வாக்குறுதியை அளித்தாா்.
பிரசாரத்தின்போது, எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் சக்கரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் உள்பட பலா் உடனிருந்தனா்.