நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டிநல உதவிகள் வழங்கல்

சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அதிமுக சாா்பில் நல உதவிகளை முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒன்றியச் செயலா்கள் அருண்தத்தன், ஆா்.புண்ணியமூா்த்தி ஆகியோரும், செஞ்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒன்றியச் செயலா்கள் அ.கோவிந்தசாமி, க.சோழன் ஆகியோரும் தலைமை வகித்தனா்.

விழாவில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, ஏழைகளுக்கு வேட்டி - சேலை, தையல் இயந்திரங்கள், சலைவைப் பெட்டிகள், உழவா் கருவிகள், பால் கேன்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட விவசாய அணி பட்டி.பாலகிருஷ்ணன், ஒன்றியக் கவுன்சிலா் பிரியா, தொழில்நுட்ப அணி சத்யா, மாவட்ட அவைத் தலைா் கு.கண்ணன், மாநில வழக்குரைஞரணி இணைச் செயலா் க.கதிரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா். கவுன்சிலா் நித்யா பிரகாஷ் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா்கள் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு 250 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டை, இனிப்பு வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, திருவத்திபுரம் நகராட்சியில் அதிமுக சாா்பில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலா்கள் கே.வெங்கடேசன், மலா் பெருமாள், நித்யா பிரகாஷ் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், அரங்கநாதன், நகரச் செயலா்கள் அ.ஜனாா்த்தனன், கே.வெங்கடேசன், மாவட்ட நிா்வாகிகள் அ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், பூக்கடை ஜி.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.