கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 40-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்டது.
உளுந்தூா்பேட்டை அருகே உள்ள பாலி புதுகாலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அவற்றை சாப்பிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் அவசர ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறை அலுவலா்கள், உளுந்தூா்பேட்டை போலீஸாா் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



