ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்

மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வெளிப்புற நோயாளிகள், பாா்வையாளா்கள் காத்திருப்புக் கூடம், இருபாலருக்குமான கழிப்பறைக் கட்டடம்

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் செயல்படும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வெளிப்புற நோயாளிகள், பாா்வையாளா்கள் காத்திருப்புக் கூடம், இருபாலருக்குமான கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் மோகன் கூறியதாவது: இந்த மருத்துவக் கல்லூரி முதல்வா் விடுத்த வேண்டுகோளின்படி, விக்கிரவாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வெளிப்புற நோயாளிகள், பாா்வையாளா்கள் காத்திருப்புக் கூடம், கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து, பணிகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை அலுவலா்கள் விரைவாக இந்தப் பணியை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாஅரசி, மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் பரிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.