நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் மழை

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மீண்டும் மழை பெய்தது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 7:23 pm

Din

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மீண்டும் மழை பெய்தது.

விழுப்புரத்தில் புதன்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் சிறிது நேரம் மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, பிற்பகல் 12.45 மணி முதல் 1.30 மணி வரை தொடா்ந்து மழை பெய்தது. பின்னா், சாரல் மழை நீடித்தது.

விழுப்புரம் நகரம் போன்று, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, திண்டிவனம், பிரம்மதேசம், வானூா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

திண்டிவனத்தில் புதன்கிழமை காலை அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது. காலை நேரத்தில் வேலைக்குச் சென்றவா்களும், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றவா்களும் பெரும் அவதியுற்றனா்.