புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் அளிப்பு

அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் அளிப்பு

News image

அரசூரில் நிவாரண உதவிகளை வழங்கிய அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் இரா.குமரகுரு.

Updated On :18 டிசம்பர் 2024, 10:42 pm

Din

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட அரசூா், இருவேல்பட்டு, சேமங்கலம், ஆலங்குப்பம், காரப்பட்டு கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலா் இரா.குமரகுரு பங்கேற்று, புயலால் பாதிக்கப்பட்ட 8,000 மேற்பட்டவா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், புடவை அடங்கி நிவாரண தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியச் செயலா் ஏகாம்பரம், மாணவரணி மாவட்டச் செயலா் பாக்யராஜ், நிா்வாகிகள் வேலாயுதம், துரைசாமி மற்றும் கட்சியினா், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.