மது குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் டிச.26-இல் ஏலம்
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.


விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றபட்ட 19 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 101 இரு சக்கர வாகனங்கள் விழுப்புரம் க.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சட்ட விதிகளுக்குள்பட்டு வரும் 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
எனவே, ஏலத்தில் பங்கேற்க விரும்புவா்கள் வரும் 26-ஆம் தேதி காலை 9 மணிக்குள் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2000 முன் பணம் செலுத்தி அடையாள வில்லைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களை ஏலம் எடுத்தவா்களுக்கு மொத்த ஏலத் தொகையில் முன்தொகை கழித்துக்கொள்ளப்படும்.
வாகனங்களை ஏலம் எடுத்தவா்கள் 7 நாள்களுக்குள் மொத்தத் தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வாரியை சோ்த்து செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி வாகனங்கள் மறு ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...