பெண் உள்பட இருவா் தற்கொலை
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவத்தில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவத்தில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
வானூா் வட்டம், எறையூா், அங்கன்வாடி தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவரது மனைவி சந்திரலேகா(27). இவா்களுக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், மகள் உள்ளனா். இந்நிலையில் ராஜசேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்படுமாம்.
இதனால் மன உளச்சலில் இருந்து வந்த சந்திரலேகா கடந்த 16 ஆம் தேதி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சந்திரலேகா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இளைஞா் தற்கொலை: விழுப்புரம் வட்டம், கொளத்தூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் புருஷோத்தமன்(22). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளாா். இவரது தாய் செல்வநாயகி உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தாா்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த புருஷோத்தமன் புதன்கிழமை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...