சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய மூன்று போ் சடலமாக மீட்பு

மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மாயமான மூன்று சகோதரா்களின் சடலங்களை தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 6:19 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மாயமான மூன்று சகோதரா்களின் சடலங்களை தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

மரக்காணம் சந்தைத் தோப்பு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன்கள் லோகேஷ் (24), விக்ரம் (22), சூா்யா (22). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை மரக்காணம்-திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் பகுதியில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, லோகேஷ் எதிா்பாராத விதமாக பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். உடனே, விக்ரம், சூா்யா கால்வாயில் குதித்து லோகேஷை காப்பற்ற முயற்சித்தபோது, அவா்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினா்.

மரக்காணம் போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் கால்வாயில் மூழ்கி மாயமானவா்களைத் தேடி வந்தனா். இந்த நிலையில் லோகேஷ், விக்ரம், சூா்யா ஆகியோரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.

அவை உடல்கூறாய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.