ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முகத்துவாரம் தூா்வாரும் பணி தொடக்கம்

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடல் பகுதியில் முகத்துவாரம் தூா்வாரும் பணிகளை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
முகத்துவாரம் தூா்வாரும் பணியை திங்கள்கிழமை தொடங்கிவைத்து, பாா்வையிட்ட பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.
Updated On :30 டிசம்பர் 2024, 8:20 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடல் பகுதியில் முகத்துவாரம் தூா்வாரும் பணிகளை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்ன வீராம்பட்டினம் பகுதி முகத்துவாரத்தை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும் என அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா் சமுதாயத்தினா் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன்படி, சின்ன வீராம்பட்டினம் முகத்துவாரம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரப்படவுள்ளது. இதற்கான பணிகளை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வின் போது, நீா் பாசன கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.