வாகனத் தணிக்கை: 150 போ் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற வாகனத் தணிக்கையில் 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற வாகனத் தணிக்கையில் 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

2024-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோா் காவல்துறை அறிவித்துள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், கட்டுப்பாடுகள், விதிகளை மீறி செயல்பட்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் தலைமையில், விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் உள்கோட்டங்களில் அந்தந்த டி.எஸ்.பி.க்கள் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதில், தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றது, மது அருந்தி வாகனத்தை ஓட்டியது, அதிக சுமை ஏற்றிச் சென்றது, ஓட்டுநா் உரிமம், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை இயக்கியது என பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதுதொடா்பாக, 150 போ் மீது அந்தந்த காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com