திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புனித அந்தோனியாா் சொரூபம் சேதம்

விழுப்புரம் மாவட்டம், காணையில் புனித அந்தோனியாா் சொரூபத்தை சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:08 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், காணையில் புனித அந்தோனியாா் சொரூபத்தை சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், காணை பிரதான சாலையிலிருந்து காணை குப்பத்துக்குச் செல்லும் வழியில் புனித ஆரோக்கியமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 2 அடி உயரத்திலான புனித அந்தோனியாா் சொரூபம் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை புனித அந்தோனியாா் சொரூபம் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.