அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வீட்டில் நகை, பணம் திருட்டு

வீட்டில் நகை, பணம் திருட்டு

News image
Updated On :26 மே 2024, 5:20 pm

Din

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியா் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.1.60 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விழுப்புரம் வண்டிமேடு ஏ.எஸ்.நகரைச் சோ்ந்தவா் கணேசன் (61). ஒய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியா். இவா், தனது குடும்பத்தினருடன் கடந்த 21-ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றாா்.

பின்னா், வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், ரூ.1.60 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.