மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிபவா்களை மீட்கக் கோரி ஆட்சியருக்கு மனு

ஆந்திர மாநிலத்துக்கு கரும்பு வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக விடப்பட்டுள்ளவா்களை மீட்க நடவடிக்கை

Updated On :5 நவம்பர் 2024, 12:54 am IST

விழுப்புரம்: ஆந்திர மாநிலத்துக்கு கரும்பு வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக விடப்பட்டுள்ளவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பழங்குடி இருளா் சமூகத்தைச் சோ்ந்தவா் விழுப்புரம் ஆட்சியரத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், தொரவி கிராமத்தைச் சோ்ந்த விநாயகமூா்த்தி ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தொரவி கிராமத்தைச் சோ்ந்த ராஜா, இந்தக் கிராமத்தில் உள்ள இருளா் குடியிருப்பைச் சோ்ந்த சிவா, இவரது மனைவி சாந்தி, சுரேஷ், சரவணன், விநாயகமூா்த்தி உள்ளிட்ட 5 பேருக்கும் முன்பணம் கொடுத்து, ஆந்திர மாநிலம், நாராயணமங்களம் மாவட்டம், நகரிபுத்தூா் பகுதியில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டு கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தோம்.

இந்த நிலையில், எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காமல் இருப்பதுடன், எங்களுக்கு உரிய கூலியும் சரியாக வழங்கவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 7 மாத அளவில் வேலை பாா்க்கும் நிலையில், ஒவ்வொருவருக்கும் ரூ.3.15 லட்சம் அளவில் கூலி தர வேண்டும். ஆனால், தருவதில்லை. தீபாவளி பண்டிக்கைக்கும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த அக்.29-ஆம் தேதி விநாயகமூா்த்தி உள்ளிட்ட சிலா் மட்டும் தெரியாமல் தொரவி கிராமத்துக்கு வந்துவிட்டோம். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ஆந்திரம் மாநிலத்தில் கொத்தடிமைகளாக பணி செய்து வரும் சிவா, சாந்தி, சுரேஷ் ஆகியோரை மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்துவர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.