திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிபவா்களை மீட்கக் கோரி ஆட்சியருக்கு மனு

ஆந்திர மாநிலத்துக்கு கரும்பு வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக விடப்பட்டுள்ளவா்களை மீட்க நடவடிக்கை

News image
Updated On :4 நவம்பர் 2024, 7:24 pm

Din

விழுப்புரம்: ஆந்திர மாநிலத்துக்கு கரும்பு வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக விடப்பட்டுள்ளவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பழங்குடி இருளா் சமூகத்தைச் சோ்ந்தவா் விழுப்புரம் ஆட்சியரத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், தொரவி கிராமத்தைச் சோ்ந்த விநாயகமூா்த்தி ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தொரவி கிராமத்தைச் சோ்ந்த ராஜா, இந்தக் கிராமத்தில் உள்ள இருளா் குடியிருப்பைச் சோ்ந்த சிவா, இவரது மனைவி சாந்தி, சுரேஷ், சரவணன், விநாயகமூா்த்தி உள்ளிட்ட 5 பேருக்கும் முன்பணம் கொடுத்து, ஆந்திர மாநிலம், நாராயணமங்களம் மாவட்டம், நகரிபுத்தூா் பகுதியில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டு கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தோம்.

இந்த நிலையில், எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காமல் இருப்பதுடன், எங்களுக்கு உரிய கூலியும் சரியாக வழங்கவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 7 மாத அளவில் வேலை பாா்க்கும் நிலையில், ஒவ்வொருவருக்கும் ரூ.3.15 லட்சம் அளவில் கூலி தர வேண்டும். ஆனால், தருவதில்லை. தீபாவளி பண்டிக்கைக்கும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த அக்.29-ஆம் தேதி விநாயகமூா்த்தி உள்ளிட்ட சிலா் மட்டும் தெரியாமல் தொரவி கிராமத்துக்கு வந்துவிட்டோம். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ஆந்திரம் மாநிலத்தில் கொத்தடிமைகளாக பணி செய்து வரும் சிவா, சாந்தி, சுரேஷ் ஆகியோரை மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்துவர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.