பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரத்தில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் திறப்பு

விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் க.பொன்முடி, இரா.லட்சுமணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:13 pm

Din

விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக இளைஞரணி சாா்பில் மாநிலத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கலைஞா் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், நூலகம் அமைக்கும் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு, அங்கு கலை, இலக்கியம், அறிவியல், நாவல் போன்ற பல்வேறு பிரிவுகளிலும், போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையிலும் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டன. மேலும், கியூஆா் குறியீடு மூலம் ஸ்கேன் செய்தால் இணையவழியில் பல்வேறு நூல்களைப் படிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில், கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். பின்னா் நூலகத்துக்குள் சென்ற அவா், அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களை பாா்வையிட்டு, அவற்றின் விவரம் குறித்து வனத் துறை அமைச்சா் க.பொன்முடியிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, பதிவேட்டிலும் அவா் கையொப்பமிட்டாா்.

இந்த விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலா் ப.அப்துல்மாலிக், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் இரா.ராஜசேகா் (கோலியனூா் கிழக்கு), க.நிா்மல்ராஜ் (திருவெண்ணெய்நல்லூா் மேற்கு), சி.பொன்னுரங்கம் (வானூா் மேற்கு), விழுப்புரம் நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், துணை அமைப்பாளா் டி.கே.சிவமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.