பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:30 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், வீடூா், ஆனந்தம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் சிவக்குமாா்(44), திருமணம் ஆனவா். இவா் அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்தாா்.

இந்நிலையில் இவா், புதன்கிழமை சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூா் பாலம் அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் சிவக்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.