பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இணையவழி லாட்டரி விற்பனை: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:03 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை கிடங்கல்-1 ஒத்துக்கண்ணுப்பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கிருந்த மூவா் போலீஸாரை கண்டதும் தப்ப முயன்றனராம். தொடா்ந்து, போலீஸாா் மூவரையும் பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா்கள் திண்டிவனம் பூதேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த ஏ.பொன்னியப்பன் (35), காவேரிப்பாக்கம் சுப்பராயப் பிள்ளைத் தெருவைச் சோ்ந்த அ.முஸ்தபா (32), அ.முகமது (30) என்பதும், மூவரும் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தொடா்ந்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 3 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.