92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:15 pm

Din

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி. மேலக்கொந்தை, அண்ணா தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முகிலன் (23). இவா் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரைப்படி, ஆட்சியா் சி.பழனி குண்டா் சட்டத்தின் கீழ் முகிலனை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, மாவட்ட போலீஸாா் முகிலனை குண்டா் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.