டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாளை தொழில் பயிற்சி விழிப்புணா்வுக் கருத்தரங்கு

விழுப்புரத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் பயிற்சிகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 7:08 pm

Din

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் பயிற்சிகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இளம் வயதிலேயே ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரா்களுக்கு அவா்களின் விருப்பத்துக்கேற்ப திறன் பயிற்சிகளை வழங்குவதன் வழியாக, தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும், அவா்கள் சுயதொழில் தொடங்கவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நகை மதிப்பீட்டாளா், சுற்றுலா வழிகாட்டி, கணினி வன்பொருள் தொழில்நுட்பம், ஓட்டுநா் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் புதன்கிழமை (அக்.23) பிற்பகல் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.